Tuesday, February 28, 2006

<<>>குடியரசு தினம்...!<<>>

<>எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!<>

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை
கோலாகலமாக தேசியக் கொடிஏற்றி இறக்கப்படுகின்றது.
உலக நாடுகள் எல்லாம் ஒரு முறை, அதாவது அந்தந்த

நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும் கொண்டாடி
மகிழ்கின்ற நிலைதனையும், ஆனால் இந்தியத் திருநாட்டில்
மட்டும் ........ சுதந்திர தினம் என்றும் குடியரசு தினம் என்றும்

இரு வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிற நிலைதனையும் பெற்றிருக்கிறோம் என்பதை எல்லோரும்
அறிவோம்.

ஆனால், ஏன்? இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட வேண்டும்?
எதற்காக? எப்போதிருந்து? என்பதற்கான விடை காண
இன்றைய இளைய சமுதாயம் முயன்றதுண்டா? அவர்களுக்கு
அதற்கு நேரமோ, அவகாசமோ இதற்கெல்லாம்
இல்லைதான்!


அரசியல் கட்சிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சேவைச்
சங்கங்கள்...... என்று குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடியில் வண்ணப் பூக்களைக் கொட்டி கெட்டியாக கயிற்றால் கட்டி, முடிச்சுப் போட்டு, கொடிக் கம்பத்தோடு சேர்த்துவைத்து இறுகக் கட்டி வைத்திருப்பார்கள்.

அதை அவிழ்த்து அந்தக் கொடிக்கம்பத்தின் உச்சி முகர வைத்து
ஒரே ஒரு உதறலில் முடிச்சு அவிழ்க்கப்பட்டு
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பூக்களுக்கு விடுதலை
அளித்து, கொடி....கயிறை விட்டுப் போய்விடாமல் காற்றில் படபடவென பறக்க வைக்க ஒரு வி.ஐ.பி.!

முப்படை அணிவகுப்பு! மாநிலங்கள் கண்ட சாதனை விளக்க
ஊர்தி அலங்கார அணிவகுப்பு! மாநிலங்களில், மாவட்டங்கள்
சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணிவகுப்பு, சிறந்த
சேவை புரிந்தோர்க்குப் பதக்கங்கள், விருதுகள், கெளரவிப்புகள் என்று இந்தியத் துணைக் கண்டமே விழாக்கோலமாயிருக்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் மணிக்கொடி! வண்ணமயமாய்
மூவர்ணக்கொடி காற்றில படபடக்கிறது. பள்ளிச்
சிறுவர்களுக்கு குதூகலம். வாயில் இனிக்கும் மிட்டாய்.
அதைவிட இனிப்பு.... இன்று பள்ளி விடுமுறையல்லவா?

கூடல் நகரில்.....!
நள்ளிரவு! அந்த நடுச்சாம வேளையில் பெயர் தெரியாத
இளைஞர்கள் சிலர் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
ஊரே உறங்கிக் கொண்டிருக்கையில்.....இவர்களின் கண்களும்
காதுகளும் விழித்துகொண்டிருக்க, அந்த மையிருட்டில் அவர்கள்
உருவமே அவர்களுக்குத் தெரியாத நேரத்தில் அவர்கள்
பேசிக்கொண்டது வேறு எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை!

பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம் ஒருவித துறுதுறுப்பு;
ஒருவித பரபரப்பு தென்பட்டதை அந்தக் காரிருள் மறைத்துக் கொண்டது.
அவர்கள் பேச்சு ஒருவித முடிவுக்கு வந்ததற்கு அடையாளமாக
எல்லோரின் தலையும் சம்மதம் என்பது போல ஆடி அசைய,
அந்த இளைஞர் குழுவின் தலைவன் எதையோ எடுத்து
ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கின்றான். எல்லோரும் பெற்றுக்கொண்ட அடுத்த வினாடி....

அரைக்கால்டிரவுசர் அணிந்த இளைஞர்கள் எதையோ கைகளில் மறைத்துப்
பிடித்துக்கொண்டு கால்கள் பின்னந்தலையில் இடிக்க ஓட்டமாய் ஓடிவருகின்றனர்! அவர்கள் ஓடி வந்து நின்ற இடம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

கோவில் நடை திறக்கப்படவில்லை. திரைப்படக் காட்சிபோல அடுத்தடுத்த காட்சிகள் அங்கு அரங்கேறுகின்றன. மீனாட்சி அம்மன் கோவில் மதில் சுவரை ஒட்டி ஒரு சிறுவன் குனிந்துகொள்ள, அவன் முதுகில் மற்றவன், அவன் முதுகில் இன்னொருவன் என்று மளமளவென்று ஒருவரை ஒருவர் ஏணியாக்கி மேலேறுகின்றனர். அங்கிருந்து கோபுரத்துக்குத் தாவுகின்றனர். கிடுகிடுவென கோபுரத்தில் செதுக்கியிருந்த சிலைகளைப் பற்றி தங்கள் கால்களில் மிதித்து ஏறி முன்னேறுகின்றனர். கோபுர உச்சியை அடைந்ததும்
தாங்கள் கையோடு கொண்டு வந்ததை அங்கிருந்த கலசங்களில் கட்டுகின்றனர்.

கட்டி முடித்துவிட்டு கீழே பார்க்கின்றனர்; தலை சுற்றிப்போகிறார்கள்; ஆஹா! இவ்வளவு உயரத்திலா இருக்கிறோம் என்று எண்ணுகிறார்கள்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுது; தூரத்தில் வருகிறவர் முகம் தெரியாத இருட்டு!

கூடல் மாநகராம் மதுரை மாநகர வீதிகளில் பெண்கள் தங்கள் முற்றத்தைப் பெருக்கி சாணம் தெளித்து, மாக்கோலம் இட்டு, பசுஞ்சாணத்தை உருண்டை பிடித்து அதன் தலையில் இதழ் விரிக்காத பூசணிப் பூவை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிற காலை வேளை!

பால், தயிர், மோர் விற்கும் பெண்கள்! வீட்டுக்குத் தண்ணீர் சுமக்கும் பெண்கள்!

காலைக்கடன்களை முடிக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஆண்கள்!
அத்தனை பேர்களின் கண்களும் மீனாட்சி அம்மன் கோவில் உச்சியைத் தரிசிக்கிறது!
ஆஹா! அடைந்துவிட்டோமா !? நாம் அந்தச் சுதந்திரத்தை அடைந்து விட்டோமா என்று வியப்பு மேலோங்கப் பார்த்துப் பரவசப்படுகின்றனர்.
அன்றைக்கு அதிகாலையில் அவர்களின் கண்களுக்குக் காட்சியளித்தது மீனாட்சி அம்மன் கோவில் கலசங்களில் பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக் கொடிதான் அது! அதைத்தான் அந்தச் சிறுவர்கள் அங்கே... அந்த உச்சிக்கு எடுத்துச் சென்று கூடல் நகருக்கே தெரியவேண்டுமென்று கட்டிப் பறக்கவிட்டிருந்தார்கள்!
அவர்கள் அப்படிச் செய்யக் காரணம், காந்திஜி அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த கட்டளை அது!

குடியரசு தினம் மலர்ந்த காரணம்...

1929-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய
காங்கிரஸ் மாநாட்டில், "பூரண சுயராச்சியமே நமது நாட்டின்
உடனடியான இலட்சியம்'' என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனைச் செயல்படுத்த 'எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரிகொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை
காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான
மற்றொரு தீர்மானத்தின்படி, காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த
தேசிய உணர்வும் ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர்.
அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி
வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தைக் காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில்
திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பது குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி.... முதல் குடியரசு தினம்......!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்திஜி வேண்டுகோள் விடுத்தார்.


அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி அன்றைய தினம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ்தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.
ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்: ''நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.'' ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பதாக அவ்வாசகம் அமைந்திருந்தது.
அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான் சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது1948ல்!
இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.
ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக்கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்! சுதந்திரமாகப் பறக்கத் துடிதுடிக்கும்
மூவர்ணக்கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக்கொடுக்கவேண்டும்!

எல்லோருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்!

<<>>நேசிப்பாளர்கள் தினம்...!<<>>



நேசிப்பாளர்கள் தினம்
(VALENTINE'S DAY )


பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து,
பரவலாக உலகம் முழுக்கபரவியதுதான்
பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும்
வாலண்டைன் தினம்.

நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி
இப்படி நெஞ்சில் நேசங்களைவளர்த்துக் கொண்டவர்கள்
ஒருவருக்கொருவர் நேரில், அஞ்சல் மூலமாக
மகிழ்ச்சிநிறைந்த "வாலண்டைன் வாழ்த்துக்கள்"
என்று சொல்லி தங்களை வெளிப்படுத்திக்கொள்கிற
உற்சாக தினம் இது!

மையல் கொண்ட இரு இதயங்களுக்கு
குதூகலமளிக்கிறவசந்த தினம் இது!

"BE MY VALENTINE" என்றும் "FROM YOUR VALENTINE"என்றும்
தங்கள் உள்ளக் கிடக்கையை உணர்த்துகிற
உணர்ச்சிப்பூர்வமான நாள்இது!இதன் தொடக்கம் என்ன?
எப்படி? ஏன்? என்ற கேள்விகள் எழுவது இயற்கை.
இதற்குவிடை தெரிந்து கொள்வதை விட, தமக்குப்பிடித்த
மனதின், எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்வதில் தான்
ஆர்வம் காட்டுவர்பலர் என்பது, உள்ளங்கை நெல்லிக்
கனிவிஷயம். காலம்காலமாக வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்து நிற்கிற இந்த இனியதினம் உலகில் முகிழ்த்த விதத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போமா?

ரோமானியர்கள் லூப்பர்காலியா என்ற திருவிழா கொண்டாடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றுக்கும்மேற்பட்ட புனிதர்களைக் குறிக்கும் வகையில் இந்த நாளைக் கொண்டாடியதாகவும்ஒரு கருத்துநிலவுகிறது.

இன்னும் சிலர் பிப்.14ம் தேதி மத்திய இங்கிலாந்தில்ஒருவிதப் பறவைகள் மூலமாகத் தங்கள் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேயப்பழமைவாதிகளின் இந்த நாளையே வாலண்டைன் தினமாகக் கொண்டாடியதாகவும் கருத்துநிலவுகிறது.

ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் வாலண்டைன் தினம் கொண்டாடத்துவங்கியதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. ரோமானியச் சக்கரவர்த்திகிளாடிஸ் II கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்தகாலகட்டம்அது! முட்டாள் தனமாக தமது இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிப்பான். இதனால்இராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர். புதிதாக இராணுவத்தில் சேரயாரும் முன்வரவில்லை.

தனது மந்திரி பரிவாரங்களை அழைத்து ஆலோசனைநடத்தினான். உருப்படியாக ஒருவரும் சொல்லவில்லை என கோபப்பட்டான்.
அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டுஎழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்தஅமைச்சரை அழைத்து வரச் சொன்னான். அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார்.
"நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பைஉடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமேசெய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது.

இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்குவருகிறது" என்றான் அரசன்.அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க...கிளாடிஸின் உறுமல்," மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான். அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.

அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியைவிட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து
இராணுவத்தில் சேருவார்கள்.

போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள்.
வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது.திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.ஆணும் பெண்ணும் கூடிக் களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதியில் கடவுளேதாம் ஏவாளைப் படைத்தார். இறைவன்அங்கீகரித்த இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறிஇரகசியமாகத்திருமணங்களை நடத்தி வைத்தார்.

முதல் வாலண்டைன் வாழ்த்து!எட்டப்ப ஒற்றர்கள் மூலம்
இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைன்",
அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டுஎழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்தஅமைச்சரை அழைத்து வரச் சொன்னான்.

அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார். "நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பைஉடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமேசெய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது. இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்குவருகிறது" என்றான் அரசன்.

அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க...கிளாடிஸின் உறுமல்," மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான்.

அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியைவிட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது.திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.ஆணும் பெண்ணும் கூடிக் களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதியில் கடவுளேதாம் ஏவாளைப் படைத்தார்.

இறைவன்அங்கீகரித்த இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறிஇரகசியமாகத்திருமணங்களை நடத்தி வைத்தார். முதல் வாலண்டைன் வாழ்த்து!எட்டப்ப ஒற்றர்கள் மூலம் இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைன்
நிறைவேற்ற நாளும்நிர்ணயிக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார்வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள்அஸ்டோரியசுக்கும் அன்பு பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்தசிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள்சிதைந்தது. உருக்குலைந்து போனாள், அஸ்டோரியஸ்.

அஸ்டோரியசுக்கு, அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று, செய்தி சுமந்து வந்தது.

விழி இருந்தும்
வழி இல்லாமல் - மன்னன்
பழி தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து - பார்க்க
வழி இழந்து, நீ மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல் மக்களுக்காக
பலியாடாய் போகிறேன்; நீ
ஒளியாய் வாழு! பிறருக்கு
வழியாய் இரு!! சந்தோஷ
ஒளி உன் கண்களில்மிளிறும்!!
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!
( -From your Valentine....)

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையேபரந்து விரிந்து நிறைந்து நிற்கிற வைர வரி வாசகமாகும். இது மட்டுமேஉண்மையாக இருக்குமானால் இந்தச் செய்தியைத் தாங்கி வந்த முதல் வாலண்டைன்அட்டை இதுவாகத்தானிருக்கும்.

வாலண்டைனின் செய்தியை, தோழி வாசிக்க அஸ்டோரியஸின் கண்கள் கண்ணீர்பூக்களைச் செறிந்த அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டுசித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள்270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்து தன்னையே பலி கொடுத்த வாலண்டைன்"ரோம் " மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானியசர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது "பாகான்"விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. பாகான் என்றால் மதமற்றவன் என்றுபொருள். பின்னர் இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் I ( 496 ம் ஆண்டு )"
அமெரிக்கா...
அமெரிக்காவில் மழலையர் வகுப்பில் துவங்கி பல்கலைக் கழகம் வரையிலும்வாலண்டைன் பார்ட்டி நடக்கிறது. மழலையர் வகுப்பில் விபரம் புரியாத அந்தப்பிஞ்சுகள் கர்ம சிரத்தையாக தாமே வாலண்டைன் வாழ்த்து அட்டை தயாரிப்பது,விதவிதமான "ஹார்ட்" டுகள் என்று மெனக்கெட்டு செய்வதைப் பார்த்தால் நம்ஊரில் கல்லூரி மாணவர்கள் கூட இது போன்று ஈடுபடுவதில்லை என்றே சொல்லவேண்டும். மழலையர் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருகாகிதப்பை பிப்ரவரி முதல் வரத்தில் கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பில்பயிலும் குழந்தைகள் பெயர் அடங்கிய பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள்.ஒவ்வொரு குழந்தையும் அத்துனை பேர்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரித்துஅல்லது கடையில் வாங்கி பிஞ்சு விரல்களால் வண்ணக்குச்சிகளை வைத்து எழுதி,வரைந்து கூடவே மிட்டாய்கள், சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளையும் கொண்டுபோய் பள்ளியில் உள்ள அந்தந்த மாணவர்கள் பைகளில் பெயரைப் படித்துசந்தோஷமாக அவரவர் பைகளில் போடும்போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணைஏது?உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகளில் முன்பதிவு செய்துவிட்டுபுத்தாடைகள் சகிதமாக யுவன்களும்,யுவதிகளும் டேட்டிங் வைத்துக் கொண்டவயதான ஜோடிகள் உட்பட நடனங்களிலும் ஷாம்பெய்ன் பார்ட்டிகளிலும்அமெரிக்காவில் அமரிக்கையாக சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நீந்தி மகிழ்கிறஒப்பற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் 1898 நவம்பர் 21ம் தேதி உலகின்முதல் வாலண்டைன் மியூசியம் திறந்து வைக்கப்பட்டது.பிரிட்டன்...பிரிட்டிஷ் குழந்தைகள் இந் நாளில் விஷேசமான பாடல்களைப்பாடிக்கொண்டாடுவார்கள். பெரியவர்கள் இவர்களுக்கு பரிசுகள், பழங்கள்,கேக்குகள், சாக்லேட்கள் மற்றும் பணமும் கொடுத்து மகிழ்வார்கள்.இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இந் நாளில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட"வாலண்டின் பண்"ணை பிறந்த நாள் கேக் போல வாங்கி நண்பர்களுக்கும் தங்கள்மனங்கவர்ந்தவர்களுக்கும் அளித்து மகிழ்வார்கள்.1700களில்....வனிதையர்கள் தங்கள் வருங்கால இணையைத் தேர்வு செய்ய 1700களில் நூதனமான",

வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து மனிதப் புனிதர்வாலண்டைன் தினம் ( St.Valentine's Day ) உலகம் கொண்டாடத் தலைப்பட்டது.அமெரிக்கா...அமெரிக்காவில் மழலையர் வகுப்பில் துவங்கி பல்கலைக் கழகம் வரையிலும்வாலண்டைன் பார்ட்டி நடக்கிறது. மழலையர் வகுப்பில் விபரம் புரியாத அந்தப்பிஞ்சுகள் கர்ம சிரத்தையாக தாமே வாலண்டைன் வாழ்த்து அட்டை தயாரிப்பது,விதவிதமான "ஹார்ட்" டுகள் என்று மெனக்கெட்டு செய்வதைப் பார்த்தால் நம்ஊரில் கல்லூரி மாணவர்கள் கூட இது போன்று ஈடுபடுவதில்லை என்றே சொல்லவேண்டும். மழலையர் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒருகாகிதப்பை பிப்ரவரி முதல் வரத்தில் கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பில்பயிலும் குழந்தைகள் பெயர் அடங்கிய பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் அத்துனை பேர்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரித்துஅல்லது கடையில் வாங்கி பிஞ்சு விரல்களால் வண்ணக்குச்சிகளை வைத்து எழுதி,வரைந்து கூடவே மிட்டாய்கள், சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளையும் கொண்டுபோய் பள்ளியில் உள்ள அந்தந்த மாணவர்கள் பைகளில் பெயரைப் படித்துசந்தோஷமாக அவரவர் பைகளில் போடும்போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணைஏது?உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகளில் முன்பதிவு செய்துவிட்டுபுத்தாடைகள் சகிதமாக யுவன்களும்,யுவதிகளும் டேட்டிங் வைத்துக் கொண்டவயதான ஜோடிகள் உட்பட நடனங்களிலும் ஷாம்பெய்ன் பார்ட்டிகளிலும்அமெரிக்காவில் அமரிக்கையாக சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நீந்தி மகிழ்கிறஒப்பற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் 1898 நவம்பர் 21ம் தேதி உலகின்முதல் வாலண்டைன் மியூசியம் திறந்து வைக்கப்பட்டது.பிரிட்டன்...பிரிட்டிஷ் குழந்தைகள் இந் நாளில் விஷேசமான பாடல்களைப்பாடிக்கொண்டாடுவார்கள். பெரியவர்கள் இவர்களுக்கு பரிசுகள், பழங்கள்,கேக்குகள், சாக்லேட்கள் மற்றும் பணமும் கொடுத்து மகிழ்வார்கள்.இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இந் நாளில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட"வாலண்டின் பண்"ணை பிறந்த நாள் கேக் போல வாங்கி நண்பர்களுக்கும் தங்கள்மனங்கவர்ந்தவர்களுக்கும் அளித்து மகிழ்வார்கள்.
இத்தாலி...இத்தாலியில் இந்நாளை விசேஷ நாளாக அனுசரிப்பதோடு பெரிய வாலண்டைன்விருந்துடன் (Valentine's Day Feast ) கொண்டாடி மகிழுகின்றனர். மேலும்திருமண வயதைக் கடந்தும் தள்ளிப் போகிற?டே என்கிற ஏக்கங்களில் அழுதகண்ணும், சிந்திய மூக்குமாக இருக்கிர மங்கையர்க்கு இந்த நாள் மகிழ்ச்சிப்பூக்களை மலர வைக்கிற மங்கல நாள்! சூரியன் சுதாரித்து எழுமுன் அதிகாலையில்எழுந்து நீராடி தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஜன்னல் முன்னால் அமர்ந்துவிடுவார்களாம். அறிந்தும் அறியாமல் அவ்வழியாக வருகிற வாலிபர்களை இந்த"ஜன்னல் மின்னல்கள்" கண்களால் தூதுவிடுவார்கள். ( இதை அறிந்தே சிலஜொள்ளுப் பார்ட்டிகள் இப்படியும் அப்படியும் நடமாடியிருக்கக் கூடும்!?)வேல் விழிகளின் வீச்சில் சிக்கிக் கொண்டால்... அப்புறம் என்ன பேண்டுவாத்திய முழக்கத்தோடு சர்ச்சில், தம்பதியராகி விடுவார்களாம். இந்தவழக்கம் வாழையடி வாழையாக இன்றும் இத்தாலியிலும், பிரிட்டனிலும் கூடநிலவுகிறது. அந்தக்காலத்தில் இப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக "ஷேக்ஸ்பியர் " இருக்கிறார். தனது பிரபல நாடகமான "ஹாம்லெட்டில்" வரும்"ஓப்பெலியா" என்ற பெண் கதா பாத்திரம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இந்தசம்பவத்தைப் பாடுவதாக அமைத்துள்ளதிலிருந்து அறியலாம். அந்தப் பாடல்",

முறையைக் கையாண்டுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான ஒரு சிலரின்பெயர்களைக் காகிதங்களில் எழுதி களிமண்ணில் மடித்து குளத்துத் தண்ணீரில்போடுவார்கள். முதலில் எந்தப் பெயர் கொண்ட காகிதம் தண்ணீருக்கு மேல் தலைகாட்டுகிறதோ, அந்தக் காகிதத்தில் உள்ள நபர் தான் விசுவாசமான கணவராகஇருப்பார் என்று கருதி தேர்ந்தெடுப்பார்களாம். அந்த நாள் பிப்.14!இதுவே மத்திய இங்கிலாந்தில் திருமணமாகாத பெண்கள் ஒரு விதமான வாசனை தரும்இலைகள் ஐந்தை தங்கள் தலையணையின் நான்கு முனைகளிலும் ஒன்றை நடுவிலும்வைத்துக் கொண்டு வாலண்டைன் தினத்தன்று தூங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தனராம். அப்படித் தூங்கும் போது கன்னியரின் கனவில் வருங்காலக்கணவன் வருவான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்ததாம்.
( மூடநம்பிக்கைகளில்நம்மவர்களையும் மிஞ்சித்தான் இருந்திருக்கின்றனர். )
இத்தாலி...
இத்தாலியில் இந்நாளை விசேஷ நாளாக அனுசரிப்பதோடு பெரிய வாலண்டைன்விருந்துடன் (Valentine's Day Feast ) கொண்டாடி மகிழுகின்றனர். மேலும்திருமண வயதைக் கடந்தும் தள்ளிப் போகிற?டே என்கிற ஏக்கங்களில் அழுதகண்ணும், சிந்திய மூக்குமாக இருக்கிர மங்கையர்க்கு இந்த நாள் மகிழ்ச்சிப்பூக்களை மலர வைக்கிற மங்கல நாள்! சூரியன் சுதாரித்து எழுமுன் அதிகாலையில்எழுந்து நீராடி தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஜன்னல் முன்னால் அமர்ந்துவிடுவார்களாம். அறிந்தும் அறியாமல் அவ்வழியாக வருகிற வாலிபர்களை இந்த"ஜன்னல் மின்னல்கள்" கண்களால் தூதுவிடுவார்கள். ( இதை அறிந்தே சிலஜொள்ளுப் பார்ட்டிகள் இப்படியும் அப்படியும் நடமாடியிருக்கக் கூடும்!?)வேல் விழிகளின் வீச்சில் சிக்கிக் கொண்டால்... அப்புறம் என்ன பேண்டுவாத்திய முழக்கத்தோடு சர்ச்சில், தம்பதியராகி விடுவார்களாம். இந்தவழக்கம் வாழையடி வாழையாக இன்றும் இத்தாலியிலும், பிரிட்டனிலும் கூடநிலவுகிறது. அந்தக்காலத்தில் இப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக "ஷேக்ஸ்பியர் " இருக்கிறார். தனது பிரபல நாடகமான "ஹாம்லெட்டில்" வரும்"ஓப்பெலியா" என்ற பெண் கதா பாத்திரம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இந்தசம்பவத்தைப் பாடுவதாக அமைத்துள்ளதிலிருந்து அறியலாம். அந்தப் பாடல்...

காளையரே காலை வணக்கம்!
உங்கள் நல் வரவிற்காக
காலை வேளையில்
ஜன்னல் முன் - நான்
தவமிருக்கிறேன். நீ வந்து
என்வளைக் கரம் பற்றக்
காத்திருக்கிறேன் - உன்னுடைய
வாலண்டைனாக ! - (ஹாம்லெட் -1603 )
டென்மார்க்...
டென்மார்க்கில் ஒரு வகை வெள்ளைப் பூக்களை ( Snow Drops Flower )தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொள்வர். டேனிஷ் வாலிபர்கள், "கெக்கேப்ரேவ்" என்ற வாலண்டைன்கடிதத்தை எழுதி வனிதையர்களுக்கு அனுப்புவர். தமாஷான வசனங்களையோ,கவிதைகளையோ எழுதி பெயரை எழுதுவதற்குப் பதிலாக புள்ளிகளை வைத்துஅனுப்புவார்கள். பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறதோ அத்தனை புள்ளிகள்இருக்கும். இதை வைத்து தமக்கு வலை வீசிய வசீகரன் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு "ஈஸ்ட்டர் எக்" கொடுத்து "ஹக்" பண்ணிக்கொள்வார்கள்.
பிரிட்டனில் பல இடங்களில் இந்தப் புள்ளிக் கடிதம் மூலம்தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருக்கிறார்கள்.இப்படி மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து பரவிய வாலண்டைன் தினம் வரலாறுஅறியாமலே உலகம் முழுக்க "காதலர் தினம்" என்கிறதாகவே பீடு நடை போடத்துவங்கியுள்ளது. கீழை நாடுகளில் மேல்தட்டு மக்களிடையே மட்டுமே வாலண்டைன்வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
இன்னும் சில, பல ஆண்டுகளில்அதிகாரப்பூர்வமாகவே பிப் 14ம் தேதி "காதலர் தினம்" என அங்கீகரிக்கப்பட்டுவிடலாம். வாலண்டைன் பற்றி பல கிளைக் கதைகள் கூட முளைக்கலாம்.வாலண்டைன் வாழ்ந்த காலத்தைவிட வரலாறுகளைத் தேடிப் பிடித்து வருங்காலச்சந்ததியினருக்கு பொக்கிஷமாக்கி வைக்கிற பேராளர்கள் ஏராளமாய் இருக்கிறகாலமிது.
எனவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பேஅன்பு,ஆசை,நேசம்,பாசம்,பற்று,காதல் என்கிற மூவெழுத்துக்கள்முகிழ்த்துவிட்டது. இன்னும் மூன்று நூற்றாண்டுகள் பிறந்து வந்தாலும்இந்த மூவெழுத்துக்குரிய தினமாக வாலண்டைன் தினம் வாழும்!வாழ்த்து அட்டை...பொங்கலுக்கும் தீபாவளிக்கும், கிறிஸ்துமஸ¤க்கும் முன்பே வாழ்த்து",

வரிகள் இதோ : -காளையரே காலை வணக்கம்! உங்கள் நல் வரவிற்காககாலை வேளையில் ஜன்னல் முன் - நான் தவமிருக்கிறேன். நீ வந்து என்வளைக் கரம் பற்றக் காத்திருக்கிறேன் - உன்னுடைய வாலண்டைனாக ! - (ஹாம்லெட் -1603 )டென்மார்க்...டென்மார்க்கில் ஒரு வகை வெள்ளைப் பூக்களை ( Snow Drops Flower )தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொள்வர். டேனிஷ் வாலிபர்கள், "கெக்கேப்ரேவ்" என்ற வாலண்டைன்கடிதத்தை எழுதி வனிதையர்களுக்கு அனுப்புவர். தமாஷான வசனங்களையோ,கவிதைகளையோ எழுதி பெயரை எழுதுவதற்குப் பதிலாக புள்ளிகளை வைத்துஅனுப்புவார்கள். பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறதோ அத்தனை புள்ளிகள்இருக்கும். இதை வைத்து தமக்கு வலை வீசிய வசீகரன் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் அவருக்கு "ஈஸ்ட்டர் எக்" கொடுத்து "ஹக்" பண்ணிக்கொள்வார்கள். பிரிட்டனில் பல இடங்களில் இந்தப் புள்ளிக் கடிதம் மூலம்தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருக்கிறார்கள்.இப்படி மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து பரவிய வாலண்டைன் தினம் வரலாறுஅறியாமலே உலகம் முழுக்க "காதலர் தினம்" என்கிறதாகவே பீடு நடை போடத்துவங்கியுள்ளது. கீழை நாடுகளில் மேல்தட்டு மக்களிடையே மட்டுமே வாலண்டைன்வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. இன்னும் சில, பல ஆண்டுகளில்அதிகாரப்பூர்வமாகவே பிப் 14ம் தேதி "காதலர் தினம்" என அங்கீகரிக்கப்பட்டுவிடலாம். வாலண்டைன் பற்றி பல கிளைக் கதைகள் கூட முளைக்கலாம்.வாலண்டைன் வாழ்ந்த காலத்தைவிட வரலாறுகளைத் தேடிப் பிடித்து வருங்காலச்சந்ததியினருக்கு பொக்கிஷமாக்கி வைக்கிற பேராளர்கள் ஏராளமாய் இருக்கிறகாலமிது.எனவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பேஅன்பு,ஆசை,நேசம்,பாசம்,பற்று,காதல் என்கிற மூவெழுத்துக்கள்முகிழ்த்துவிட்டது. இன்னும் மூன்று நூற்றாண்டுகள் பிறந்து வந்தாலும்இந்த மூவெழுத்துக்குரிய தினமாக வாலண்டைன் தினம் வாழும்!வாழ்த்து அட்டை...பொங்கலுக்கும் தீபாவளிக்கும், கிறிஸ்துமஸ¤க்கும் முன்பே வாழ்த்து
இந்த நாளுக்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள், அலங்கரிக்கப்பட்டஹார்ட்டுகள், வீட்டை அலங்கரிப்பதற்கான பொருட்களின் கோலாகலமான விற்பனைதுவங்கிவிடுகிறது. பெரிய பெரிய பேனர் விளம்பரங்களிலும் கண்ணைப்பறிக்கும் மின் விளக்குகளிலும் கடைகள் வரவேற்பு வாசிக்கும். இந்தநாளுக்கான விசேஷ கேண்டிகளும், கேக்குகளும், பூங்கொத்துகளும், அலங்காரக்காகிதப் பூக்களும், மலரத் துடிக்கும் ரோஜாக்களையும் வாங்கிடும்கூட்டங்கள், நாள் நெருங்க,நெருங்க அதிகரிக்கிறது. மிக நேர்த்தியானவண்ணக் காகிதங்களில் பேக் செய்யப்பட்டு சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில்பரிசுப் பொருட்களை வாங்கி வெளியேறும் இளைஞ இளைஞிகள் கூட்டம் 1800களில்துவங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது.பிரிட்டிஷ் பெண் ஓவியர் கேட்டி கிரீனவே 1865 களில் வாழ்த்து அட்டைகளைவெளியிட்டார். மடிக்கப்பட்ட அட்டையின் உட்பக்கம் வாழ்த்துச் செய்திஎழுதுவதற்காகக் காலியிடம் விட்டும், வெளிப்பக்கங்களில் குழந்தைகள்,பூந்தோட்டங்கள் போன்ற ஓவியங்களுடன் வெளியிட்டார். இதனைக் கண்டஅமெரிக்கப் பதிப்பாளர் எஸ்தர் ஹாவ் லாண்ட் ( மசாச்சுசெட்ஸ் ) முதலில்வாழ்த்து அட்டைகள் தயாரித்து கடைகளில் ஆடர் பெற்றார். பெண்கள் சிலரைவேலைக்கு வைத்துக் கொண்டு விதவிதமான வாலண்டைன் தின வாழ்த்து அட்டையைச்செய்து விற்கத் துவங்கினார். நல்ல வரவேற்பு கிடைக்க கைவேலைப்பாடுகளுடன்கூடிய புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்தில் அதாவது1870ல் ஒரு லட்சம் டாலர் லாபம் ஈட்டினார். ஒரு டாலரிலிருந்து 35 டாலர்வரை வாலண்டைன் வாழ்த்து அட்டை விற்று விற்பனையில் ஒரு ரெக்கார்டு பிரேக்ஏற்படுத்தினார். சிகாகோ அஞ்சலகத்துக்கு திடீரென் வந்து குவிந்த 25லட்சம் வாழ்த்து அட்டைகளை நாங்கள் டெலிவரி செய்யமாட்டோம் என்று தெருவில்வீசி எறிந்த நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கது.கவிதைகள்...கவிதைகள்...வாலண்டைன் தின தலைப்பில் கவிதைப் புத்தகங்கள் இதுவரை 69 வெளிவந்துள்ளது.அமெரிக்க கவிஞர் "எட்கர் ஆல்பர்ட் கெஸ்ட் (1881-1959) எழுதிய வாலண்டைன்கவிதை 1919ல் மிகுந்த வரவேற்பு பெற்ற கவிதையாகும். "டிரேஸிபெர்"ட்டின்",அட்டைகள் கடைகளில் படு சுறுசுறுப்பான விற்பனையைத் துவங்கிவிடுவது போலஇந்த நாளுக்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள், அலங்கரிக்கப்பட்டஹார்ட்டுகள், வீட்டை அலங்கரிப்பதற்கான பொருட்களின் கோலாகலமான விற்பனைதுவங்கிவிடுகிறது. பெரிய பெரிய பேனர் விளம்பரங்களிலும் கண்ணைப்பறிக்கும் மின் விளக்குகளிலும் கடைகள் வரவேற்பு வாசிக்கும். இந்தநாளுக்கான விசேஷ கேண்டிகளும், கேக்குகளும், பூங்கொத்துகளும், அலங்காரக்காகிதப் பூக்களும், மலரத் துடிக்கும் ரோஜாக்களையும் வாங்கிடும்கூட்டங்கள், நாள் நெருங்க,நெருங்க அதிகரிக்கிறது. மிக நேர்த்தியானவண்ணக் காகிதங்களில் பேக் செய்யப்பட்டு சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில்பரிசுப் பொருட்களை வாங்கி வெளியேறும் இளைஞ இளைஞிகள் கூட்டம் 1800களில்துவங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது.பிரிட்டிஷ் பெண் ஓவியர் கேட்டி கிரீனவே 1865 களில் வாழ்த்து அட்டைகளைவெளியிட்டார். மடிக்கப்பட்ட அட்டையின் உட்பக்கம் வாழ்த்துச் செய்திஎழுதுவதற்காகக் காலியிடம் விட்டும், வெளிப்பக்கங்களில் குழந்தைகள்,பூந்தோட்டங்கள் போன்ற ஓவியங்களுடன் வெளியிட்டார். இதனைக் கண்டஅமெரிக்கப் பதிப்பாளர் எஸ்தர் ஹாவ் லாண்ட் ( மசாச்சுசெட்ஸ் ) முதலில்வாழ்த்து அட்டைகள் தயாரித்து கடைகளில் ஆடர் பெற்றார். பெண்கள் சிலரைவேலைக்கு வைத்துக் கொண்டு விதவிதமான வாலண்டைன் தின வாழ்த்து அட்டையைச்செய்து விற்கத் துவங்கினார். நல்ல வரவேற்பு கிடைக்க கைவேலைப்பாடுகளுடன்கூடிய புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்தில் அதாவது1870ல் ஒரு லட்சம் டாலர் லாபம் ஈட்டினார். ஒரு டாலரிலிருந்து 35 டாலர்வரை வாலண்டைன் வாழ்த்து அட்டை விற்று விற்பனையில் ஒரு ரெக்கார்டு பிரேக்ஏற்படுத்தினார். சிகாகோ அஞ்சலகத்துக்கு திடீரென் வந்து குவிந்த 25லட்சம் வாழ்த்து அட்டைகளை நாங்கள் டெலிவரி செய்யமாட்டோம் என்று தெருவில்வீசி எறிந்த நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கது.கவிதைகள்...கவிதைகள்...வாலண்டைன் தின தலைப்பில் கவிதைப் புத்தகங்கள் இதுவரை 69 வெளிவந்துள்ளது.அமெரிக்க கவிஞர் "எட்கர் ஆல்பர்ட் கெஸ்ட் (1881-1959) எழுதிய வாலண்டைன்கவிதை 1919ல் மிகுந்த வரவேற்பு பெற்ற கவிதையாகும். "டிரேஸிபெர்"ட்டின்
சந்தித்தால், "இப்போது இதயங்கள் தனிமையில் இல்லை " போன்ற கவிதைகள் மிகப்பிரபலமானது. வாலண்டைன் தின கவிதைகள் இதுவரை 1913 வெளிவந்திருப்பதாகபுத்தக நிறுவனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.ரோஜா...ஏறக்குறைய காதலர் உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வரும் ஒரு காதல்சின்னம் தான் "ரோஜா" என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. ( ரோஜாப்பூகிடைக்காத இடங்களில் மாமன்,மச்சான்கள் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்திருக்கலாம்!?)
35 மில்லியன் வருடங்களாக உலகில் வாசமளித்து வாசம்செய்கிற பூ ரோஜாப்பூ! வரலாறாக இருக்கிற ரோசாப் பூவிற்க்குக் கூட சிலரகசியம் உண்டு தெரியுமா? உங்களுக்கு. அத்தனை ரகசியத்தையும் இந்த திறந்த பக்கத்தில் சொல்லிவிட முடியாது. வாலண்டைன் தின ரகசியத்தை மட்டும்உங்களுக்கு இரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.வாலண்டைன் தினத்தன்று ஒரே ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்தால், "நான் உன்னைமனதார நேசிக்கிறேன்" என்று சொல்லாமல் "அந்த" அடையாளம் சொல்லிவிடும்!ஒரு "வெள்ளை ரோஜா" வைக் கொடுத்தால், \' நீதான் என் சொர்க்கம் \' என்று புரியவைக்கும்!ஒரு வெள்ளை ரோஜாவோடு ஒரு ரோஜா மொட்டும் சேர்த்துக் கொடுத்தால், " You\'retoo young for LOVE " என்று மென்மையாகப் பொருள் சொல்லும்!அதற்காக சிவப்பு ரோஜாவையும் வெள்ளை ரோஜாவையும் கையில் எடுத்துக் கொண்டுபோய் கண்டவர்களிடம் கொடுத்தால் வேறுவகையான சன்மானம், வெகுமதிசெமர்த்தியாகக் கிடைக்கலாம். அதற்கு நான் பொறுப்பில்லை சாமி... ஆளைவிடுங்கள்!அது சரி...எத்தனையோ வாசமான மலர்கள் இருக்க ரோஜாவை ஏன் காதலர்கள்தேர்ந்தெடுத்தார்கள்? காரணமில்லாமல் இல்லை."ROSE" என்ற வர்த்தையைச் சற்று மாற்றி அமைத்துப் பாருங்கள். "EROS"என்று வரும்! அடடே! காதல் கடவுளல்லவா "EROS".... அதான்!!!ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.",1]
);
//-->
கீப்பர் ஆப் த ஸ்டார்ஸ் என்ற தலைப்பில் வெளிவந்த இதயங்கள் இரண்டுசந்தித்தால், "இப்போது இதயங்கள் தனிமையில் இல்லை " போன்ற கவிதைகள் மிகப்பிரபலமானது. வாலண்டைன் தின கவிதைகள் இதுவரை 1913 வெளிவந்திருப்பதாகபுத்தக நிறுவனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.ரோஜா...ஏறக்குறைய காதலர் உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வரும் ஒரு காதல்சின்னம் தான் "ரோஜா" என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. ( ரோஜாப்பூகிடைக்காத இடங்களில் மாமன்,மச்சான்கள் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்திருக்கலாம்!?) 35 மில்லியன் வருடங்களாக உலகில் வாசமளித்து வாசம்செய்கிற பூ ரோஜாப்பூ! வரலாறாக இருக்கிற ரோசாப் பூவிற்க்குக் கூட சிலரகசியம் உண்டு தெரியுமா? உங்களுக்கு. அத்தனை ரகசியத்தையும் இந்த திறந்தபக்கத்தில் சொல்லிவிட முடியாது. வாலண்டைன் தின ரகசியத்தை மட்டும்உங்களுக்கு இரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.வாலண்டைன் தினத்தன்று ஒரே ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்தால், "நான் உன்னைமனதார நேசிக்கிறேன்" என்று சொல்லாமல் "அந்த" அடையாளம் சொல்லிவிடும்!ஒரு "வெள்ளை ரோஜா" வைக் கொடுத்தால், ' நீதான் என் சொர்க்கம் ' என்று புரியவைக்கும்!ஒரு வெள்ளை ரோஜாவோடு ஒரு ரோஜா மொட்டும் சேர்த்துக் கொடுத்தால், " You'retoo young for LOVE " என்று மென்மையாகப் பொருள் சொல்லும்!அதற்காக சிவப்பு ரோஜாவையும் வெள்ளை ரோஜாவையும் கையில் எடுத்துக் கொண்டுபோய் கண்டவர்களிடம் கொடுத்தால் வேறுவகையான சன்மானம், வெகுமதிசெமர்த்தியாகக் கிடைக்கலாம். அதற்கு நான் பொறுப்பில்லை சாமி... ஆளைவிடுங்கள்!அது சரி...எத்தனையோ வாசமான மலர்கள் இருக்க ரோஜாவை ஏன் காதலர்கள்தேர்ந்தெடுத்தார்கள்? காரணமில்லாமல் இல்லை."ROSE" என்ற வர்த்தையைச் சற்று மாற்றி அமைத்துப் பாருங்கள். "EROS"என்று வரும்! அடடே! காதல் கடவுளல்லவா "EROS".... அதான்!!!




-ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.